Tuesday, May 24, 2022
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

அன்றே சொன்னார் ஸ்டாலின் ! அரசின் அலட்சியத்தால் ஒருநாள் மழைக்கே தத்தளிக்கிறது சென்னை !வைரலாகும் பதிவு!

Oredesam by Oredesam
November 10, 2021
in செய்திகள், தமிழகம்
0
அன்றே சொன்னார் ஸ்டாலின் ! அரசின் அலட்சியத்தால் ஒருநாள் மழைக்கே தத்தளிக்கிறது சென்னை !வைரலாகும் பதிவு!

Mk Stalin

FacebookTwitterWhatsappTelegram

ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்த போது சென்னை வெள்ளம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது. அப்போது அரசு அலட்சியம் என்று கூறினார் தற்போது ஆளும் காட்சியாக இருக்கும் திமுக அரசு என்ன செய்து வருகிறது என்று கேள்விக்கணைகளை பொதுமக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதோ ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த வேளையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை “வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது என்று முன்கூட்டியே தெரிந்தும், முதலமைச்சரும், உள்ளாட்சித் துறை அமைச்சரும் காட்டிய அலட்சியத்தால், இன்றைக்கு ஒரு நாள் மழையைக் கூடத் தாங்க முடியாமல் சென்னை மாநகரத்தின் முக்கிய சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் தொடரப்போகும் வடகிழக்குப் பருவமழையால், சென்னை மீண்டும் ஒரு “டிசம்பர் 2015” வெள்ள அபாயத்தைச் சந்திக்கப் போகிறதோ என்ற அச்சம் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

.

சென்னையில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் முன்கூட்டியே எச்சரித்தது. ஏற்கனவே 2015 டிசம்பர் வெள்ளத்தில் அ.தி.மு.க. அரசின் தோல்வியால் மக்கள் பட்ட இன்னல்கள் சொல்லி மாளாது. அதிலும் ஊழல் செய்து- பிறகு சி.ஏ.ஜி அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டும் அதை அ.தி.மு.க. அரசு மறைத்தது. ஆனால் அடைந்த தோல்விகளில் கூட அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது இப்போது கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனாவோ, டிசம்பர் 2015 வெள்ளமோ, இந்த கனமழையோ – எதையுமே எதிர் கொண்டு மக்களைக் காப்பாற்றும் அடிப்படை அருகதையை அரசு இழந்து நிற்கிறது. தேங்கியுள்ள நீர், குளங்கள் போல் சாலைகளில் காட்சியளிக்கிறது. வாகனங்கள் செல்ல முடியவில்லை. போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய் விட்டது.

READ ALSO

அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.

பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி

இது தவிர, சென்னை புறநகரிலும் கன மழை பெய்கிறது. இன்னும் பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்திருக்கிறது. ஆனால் ஒவ்வொரு பணிக்கும் கோடிக் கணக்கான ரூபாய்களை ஒதுக்கி- அதைச் செலவிடாமலேயே, சுருட்டுவது எப்படி என்ற ஊழல் கலையின் ஊற்றாக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. அதில் உள்ளாட்சித்துறை அமைச்சர், “ஊழல் நாயகனாக “ வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கொரோனாவில் தோற்ற சென்னை மாநகரம், இப்போது ஒரேயொரு கன மழைக்குத் தோற்று நிற்பதும் – மாநகரம் எங்கும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரைப் பார்த்து வெட்கப்பட வேண்டும்; வேதனைப்பட வேண்டும்.

சென்னை மாநகருக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருந்தால்- இப்போது குறைந்தபட்சம், கவுன்சிலர்களாவது மக்களோடு துணைநின்று, குறைகளைத் தீர்த்து வைப்பார்கள். அதற்கான வாய்ப்பையும் கெடுத்து விட்டு அமர்ந்திருக்கும் அரசு – அதிகாரிகளையும் ஊழலில் ஈடுபட வைக்கும் பயிற்சியை மட்டும் நன்கு அளித்து, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையே கேலிக் கூத்தாக்கியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் – உடனடியாக மழை நீர் வடிவதற்கான அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்குப் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள்- ஏழை எளியோர்க்கு உணவு – உள்ளிட்டவற்றிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசால் முடியவில்லை என்றால் – தயவு செய்து பேரிடர் மீட்புப் படையை அழைத்து – முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைத்து, சென்னை மாநகரைக் காப்பாற்றப் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மீண்டும் ஒரு டிசம்பர் 2015 வெள்ளம் ஏற்பட்டு விடாமல் தடுக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் விரிவான முறையில் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் அதே வேளையில், கழகத்தின் சென்னை மாநகர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிரமப்படும் மக்களுக்கு ஆங்காங்கே தேவையான அளவு உதவிட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

(29.10.2020 அன்று மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை – இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது)

நன்றி : புதிய தலைமுறை.

https://www.puthiyathalaimurai.com/newsview/85142/chennai-grasping-in-one-day-rain-by-government-negligence–m-k-stalin

ShareTweetSendShare

Related Posts

அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.
செய்திகள்

அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.

May 21, 2022
பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி
இந்தியா

பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி

May 21, 2022
திண்டுக்கல் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் புகார்…
செய்திகள்

திண்டுக்கல் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் புகார்…

May 21, 2022
மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..
செய்திகள்

மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..

May 21, 2022
கெத்து காட்டிய பாஜக வழக்கறிஞர்கள் திமுக பிரமுகருக்கு ஜாமீன் வழங்காத நீதிமன்றம் !
செய்திகள்

கெத்து காட்டிய பாஜக வழக்கறிஞர்கள் திமுக பிரமுகருக்கு ஜாமீன் வழங்காத நீதிமன்றம் !

May 20, 2022
அண்ணாமலை போல் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்- ஆளுநர் தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார்…!!!
செய்திகள்

அண்ணாமலை போல் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்- ஆளுநர் தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார்…!!!

May 20, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

ஆந்திராவுக்கு ஸ்கெச்ட்  போட்ட பா.ஜ.க! இடைத்தேர்தலில் சந்திரபாபு நாயுடு விலகல்! நேருக்கு நேர் ஜெகனுடன் மோதல்!

ஆந்திராவுக்கு ஸ்கெச்ட் போட்ட பா.ஜ.க! இடைத்தேர்தலில் சந்திரபாபு நாயுடு விலகல்! நேருக்கு நேர் ஜெகனுடன் மோதல்!

October 7, 2021
இந்து மதத்திற்கு அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்! இந்த மாதம் இந்துக்களின் மாதம்!

இந்து மதத்திற்கு அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்! இந்த மாதம் இந்துக்களின் மாதம்!

October 27, 2021
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரானது இந்தியா 184 ஓட்டுகளுடன் இமாலய வெற்றி!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரானது இந்தியா 184 ஓட்டுகளுடன் இமாலய வெற்றி!

June 18, 2020

விவசாய சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு தயார்: வேளாண் அமைச்சர்

December 12, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.
  • பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி
  • திண்டுக்கல் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் புகார்…
  • மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x