கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு அதிரடி.. எல்லைகள் மூடல் !

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழ் நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மாநில எல்லையோர சாலை போக்குவரத்திற்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.தமிழகத்தின் எல்லையோர சாலை போக்குவரத்துக்கு தடை வித்தித்துள்ளது .

இதனிடையே வரும் ஞாயிறு அன்று பிரதமரின் ஒரு நாள் அடைப்பு முயற்சியின் கீழ் தமிழகம் முழுவதும், அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படாது என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து அரசு, தனியார் நூலகங்கள் நாளை முதல் 31-ஆம் தேதி வரை மூடப்படும் எனவும் இந்த அறிவிப்பில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version