அடடே அடுத்த சம்பவம் தி.மு.க வெற்றி பெற்றதுக்கு இஸ்லாமிய மக்கள் தான் காரணமாம்! வைரலாகும் அடுத்த வீடியோ

தி.மு.க வெற்றி பெற்றததுக்கு காரணம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களோ மறைந்த கருணாநிதியோ திமுகவினரோ இல்லை. தி.மு.க வெற்றிக்கு முழுக்க முழுக்க சிறுபான்மை மக்களே காரணம் என சிறுபான்மையின தலைவர்கள் பேசி வருகிறார்கள்.380 கோடி கொடுத்து தி.மு.க விற்கு அரசியல் ஆலோசனைகள் வழங்கிய பிரசாந்த் கிஷோர் திமுகவின் வெற்றிக்கு காரணம் இல்லை.

தி.மு.க வெற்றி பெற்றதற்கு நாங்கள் போட்ட பிச்சை என கிறிஸ்துவ பாதிரியார் கூறினார். அதை பற்றி வாய் திறக்காமல் அமைதி காத்தது கழகம். ஜமாத்தில் இமாம்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் காரணமாகவே 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது என்று இஸ்லாமிய பொதுக்கூட்டத்தில் மதபோதகர் ஒருவர் பேசியுள்ளார்.

ஆகமொத்தம் தி.மு.கவினர் பொதுமக்கள் ஒட்டு போட்டு திமுக வெற்றிபெறவில்லை. மத அரசியல் செய்து தான் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் வெற்றி குறித்து கிருஸ்துவர்கள் இஸலாமியர்கள் பேசி வருவது குறித்து எந்த தி.மு.க நிர்வாகியும் கண்டன குரல்களையும் எழுப்பவில்லை. இந்து ஆம் இந்து பண்டிகைக்கு திமுக வாழ்த்து சொல்லாது மற்ற பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் நிலையில் தான் திமுகவும் உள்ளது.

ஜார்ஜ் பொன்னையாவை தொடர்ந்து இஸ்லாமிய மத போதகர் ஒருவரும் கேட்டுக் கொண்டதன் காரணமாகவே இஸ்லாமியர்கள் அனைவரும் திமுகவிற்கு வாக்களித்தனர் என்றும் அதனால் தான் திராவிட முன்னேற்றக் கழகம் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது என்றும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இஸ்லாமியர்கள் பொது மேடையில் பேசுவதை கவனிப்பார்கள் ஆனால் செயல்படுத்த மாட்டார்கள். ஆனால் வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் ஜும்மா மேடையில் சொல்லப்பட்டால் கண்டிப்பாக செயல்படுத்தப்படும். இதற்கு உதாரணம் என்னவென்றால் பல மாநிலங்களில் ஜும்மாவில் இமாம்கள் பேசவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஜும்மாவில் இமாம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்று பேசினார்கள்.

இதனால் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு தீர்ப்பு வந்த பொழுது தமிழகத்தில் மட்டும் வேறு தீர்ப்பு வந்தது. ஜும்மாவின் இமாம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் யாரை புறக்கணிக்க வேண்டும் என்றும் பேசியதன் விளைவாகவே இவ்வாறு ஒரு தீர்ப்பு கிடைத்தது என்று ஆவேசமாக பேசினார். இதன் மூலம் தற்போது இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் பொது வழிபாட்டின்போது அரசியல் பேசி யாருக்கு வாக்களிக்க வேண்டும் யாருக்கு வாக்களிக்க கூடாது என்று முடிவெடுக்கிறார்கள் என்று தெரியவருகிறது.

ஏற்கனவே கிறிஸ்தவர்கள் திமுக வெற்றி பெற்றது தாங்கள் போட்ட பிச்சை என்று தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது இஸ்லாமியர் ஒருவரும் ஜும்மாவில் இமாம் பேசியதன் காரணமாகவே திமுக வெற்றி பெற்றது என்று தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

நன்றி : கதிர்

Exit mobile version