பாரதம் என மாற்றிய மத்திய அரசு! ஜி20 மாநாட்டிற்கு ”பாரத குடியரசு தலைவர்” என அச்சிட்ட அழைப்பிதழ்!

பாரதம் என மாற்றிய மத்திய அரசு! ஜி20 மாநாட்டிற்கு ”பாரத குடியரசு தலைவர்” என அச்சிட்ட அழைப்பிதழ்!

ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் என்பதற்கு பதில் பாரத குடியரசுதலைவர் என அச்சிடப்பட்டு உள்ளது.

ஜி20 உச்சி மாநாடு:
உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகள் சேர்ந்த ஜி20 அமைப்பிற்கு, நடப்பாண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழில் பாரத குடியரசுதலைவர்
என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.ம்

பாரத் குடியரசுதலைவர்:
அரசு சம்பந்தமான அழைப்பிதழ்களில் வழக்கமாக குறிப்பிடப்படும் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் பாரத் குடியரசுதலைவர் என அச்சிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாரத் குடியரசு என குறிப்பிட்டு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் . “நமது நாகரீகம் அமுத காலத்தை நோக்கி முன்னேறி வருவதில் மகிழ்ச்சி பெருமிதம் கொள்கிறது” என்றும் அசாம் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version