Monday, December 15, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home மற்றவைகள்

உயிர்காக்கும் உதான் விமானங்கள் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் சுமந்து வருகின்றன – 518 உதான் விமானங்கள் 875 டன் அத்தியாவசிய மருந்துப் பொருள்களை எடுத்துச் சென்றுள்ளன.

Oredesam by Oredesam
May 15, 2020
in மற்றவைகள்
0
குவைத்தில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானம்.
FacebookTwitterWhatsappTelegram

ஊரடங்கு காலமான மார்ச் 26ஆம் தேதியில் இருந்து இன்று வரை 518 உயிர்காக்கும் உதான் விமானங்கள் 875 டன் உயிர்காக்கும் மருத்துவப் பொருள்களை தேவைப்படும் இடங்களுக்கு 4,92,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.  அத்தியாவசிய மருத்துவப் பொருள்களை ஏற்றிச் செல்லும் உயிர்காக்கும் உதான் விமானங்களை இயக்கி சேவை புரிந்த கொரோனா போர் வீரர்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

கோவிட்-19 காரணமாக நம்நாட்டில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடையில் மருந்துகள் உள்ளிட்ட சரக்குப் போக்குவரத்தைப் பெரிதும் பாதித்தது.  சாலை மற்றும் ரெயில் போக்குவரத்திற்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  அத்தகைய நெருக்கடியான சூழலில் உயிர்காக்கும் உதான் விமானச் சேவையானது விரைவாக மருந்துப் பொருள்களை ஏற்றிச்சென்று உயிர்களைக் காப்பாற்றியது. இந்தச் சரக்கு விமானங்கள் மருந்துகளை மட்டும் ஏற்றிச் செல்லவில்லை.  விரைவில் அழுகக்கூடிய காய்கறிகளைக் கூட வெளிநாடுகளுக்கு இந்த விமானங்கள் ஏற்றிச் சென்றுள்ளன.  இத்தகைய சேவையானது ஏற்றுமதியாளர்களுக்குப் பெருமளவில் உதவியாக இருந்தது.  இந்த விமான சரக்குப் போக்குவரத்தில் தனிநபர் பாதுகாப்பு உபகரணம் (PPE), முகக்கவசங்கள் மற்றும் விரைவில் சென்று சேர வேண்டிய இதர அத்தியாவசியப் பொருள்களும் உள்ளடங்கும்.  சென்னைக்கும், சூரத்திற்கும் இடையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர வர்த்தக சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு தனியார் விமான நிறுவனம் ஒன்று சரக்கு விமானங்களை இயக்கியது.  பாதுகாப்பு முகக்கவசங்கள் மற்றும் கோவிட்-19 உடன் தொடர்புடைய இதர பொருள்கள் வான்வழியாக விரைவில் எடுத்துச் செல்லப்பட்டன.

READ ALSO

திருக்கோவிலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்.

மே.வங்கத்தில் இன்ஸ்டா பிரபலம் கைது.. மம்தா பானர்ஜியை மொத்தமாக முடித்துவிட்ட பவன் கல்யாண்

மருந்து விநியோகக் கம்பெனியின் இயக்குநர் திரு. ஏ.முருகானந்தம் ஊரடங்கு காலகட்டத்தில் மருந்துப் பொருள்களைத் தடையில்லாமல் விநியோகிக்க வேண்டிய தேவையை வலியுறுத்துகின்றார். பலவிதமான கட்டப்பாடுகளுக்கு இடையில் சாலை வழியே இத்தகைய சரக்குகளை ஏற்றிச் செல்வதை விட உயிர்காக்கும் உதான் சேவை மிகப் பெரிய உதவியாக இருக்கிறது.

ஊரடங்கு காலகட்டத்தில் சரக்கு விமானங்கள் மருந்துப் பொருள்களை ஏற்றிச் சென்றதோடு அழுகிவிடக் கூடிய பொருள்களையும் ஏற்றிச் சென்றன.  திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் இருந்து  தனியார் சரக்கு விமானம் ஒன்று சிங்கப்பூருக்கு ரூ.8 இலட்சம் மதிப்பிலான கத்தரிக்காய், வெண்டைக்காய், வாழைப்பழம் உள்ளிட்ட காய்கறிகளை ஏற்றிச் சென்றது.  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 3.3 மெட்ரிக் டன் அளவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட  காய்கறிகளை திருச்சியில் இருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு ஏற்றிச் சென்றது.  ஊரடங்கு காலகட்டத்தில் கோயம்புத்தூர் போன்ற தமிழ்நாட்டு விமான நிலையங்களில் இருந்து ஷார்ஜாவிற்கு 33 டன் காய்கறிகள் மற்றும் பூக்கள் உள்ளிட்ட சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.  மேலும் தமிழ்நாட்டில் இருந்து இந்திய விமானப்படை விமானங்கள், அலையன்ஸ் ஏர் மற்றும் இதர தனியார் விமான நிறுவன விமானங்களின் மூலம் மும்பை மற்றும் லக்னோவிற்கு மருத்துவ உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

வடகிழக்கு மாநிலங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்ல இந்திய விமானப்படை, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், அலையன்ஸ் ஏர், இண்டிகோ ஆகிய நிறுவனங்களின் விமானங்கள்,  புளூடார்ட் சரக்கு விமானங்கள் மற்றும் பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.  மத்திய அரசின் குறிப்பிடத்தக்க முன்னோடி நடவடிக்கையான உயிர்காக்கும் உதான் திட்டம் அவசர மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர பொருள்கள் தேவைப்படுவோருக்கு நம்பிக்கை ஒளியை கொண்டு வருகின்றன.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

திருக்கோவிலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்.
மற்றவைகள்

திருக்கோவிலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்.

August 17, 2025
MAMTA BANERJEE
மற்றவைகள்

மே.வங்கத்தில் இன்ஸ்டா பிரபலம் கைது.. மம்தா பானர்ஜியை மொத்தமாக முடித்துவிட்ட பவன் கல்யாண்

June 2, 2025
supreme-court
மற்றவைகள்

இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி! மற்றவர்களை ஏற அனுமதிக்காத ரயில்வே பெட்டி! அதிரடி காட்டிய நீதிபதி!

May 7, 2025
Krivak_III
மற்றவைகள்

நண்பேன்டா! களத்தில் இறங்கிய ரஷ்யா போர்க் கப்பல்! அலறும் அரபிகடல்! பதறும் பாகிஸ்தான்! துருக்கியாவது …..

May 6, 2025
நியாயவிலைக் கடை பணியாளர்கள் போராட்டம் திமுக அரசின் கையாலாகாத்தனம்-பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில பொருளாளர் கண்டனம் !
மற்றவைகள்

நியாயவிலைக் கடை பணியாளர்கள் போராட்டம் திமுக அரசின் கையாலாகாத்தனம்-பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில பொருளாளர் கண்டனம் !

April 22, 2025
GetoutStalin
மற்றவைகள்

ஒரு மில்லியனை கடந்த கெட் அவுட் ஸ்டாலின் … மாஸ் காட்டிய பாஜக.. தெறித்து ஓடிய திமுக…. #GetOutStalin

February 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

திமுக10 வருடம் முன்பு ஆட்சியை விட்டு போகும் போது.

December 13, 2020
பிரதமரின் கரீப் கல்யாண்த்திட்டத்தின் கீழ்  27 நாட்களில் 33.14 கோடி மக்களுக்கு  31,235 கோடி நேரடியாக நிதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கரீப் கல்யாண்த்திட்டத்தின் கீழ் 27 நாட்களில் 33.14 கோடி மக்களுக்கு 31,235 கோடி நேரடியாக நிதி வழங்கப்பட்டுள்ளது.

April 23, 2020
Annamalai

முதல்வருக்கு ஞாபக மறதியா இல்ல குற்ற உணர்ச்சியா? அண்ணாமலை கேள்வி

March 17, 2024
Kanyakumari,

கன்னியாகுமரி கடலில் முழ்கி 8 பேர் உயிரிழப்பு காரணம் என்ன? யாரும் போகாதீங்க நிலைமை சரி இல்ல!

May 7, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x