உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அயோத்தி துறவி அறிவிப்பு ! வேறு எந்த மதம் குறித்தாவது உதயநிதி இவ்வாறு பேச முடியுமா?

”சனாதன தர்மம் குறித்து அவதுாறாக பேசிய, தமிழக அமைச்சர் உதயநிதியின் தலையை கொண்டு வருவோருக்கு, 10 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும்,” என, அயோத்தியைச் சேர்ந்த ஹிந்து மதத் துறவிபரமஹம்ஸ் ஆச்சாரியா அறிவித்துள்ளார்.

‘சனாதன தர்மத்தை ஒழிப்போம்’ என, தமிழக அமைச்சர் உதயநிதி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த ஹிந்து மதத் துறவி பரமஹம்ஸ்ஆச்சாரியா நேற்று கூறியதாவது:

பல லட்சம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது சனாதன தர்மம். இதை யாராலும், எந்தக் காலத்திலும் அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது. இதற்கு துவக்கமும் கிடையாது; இறுதியும் கிடையாது.

அதை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவர். ஹிந்துக்கள், மனிதத்தன்மை உள்ளவர்கள், வன்முறையை விரும்பாதவர்கள் என்பதால்தான், ஹிந்து மதம் குறித்து விமர்சித்து வருகின்றனர்.வேறு எந்த மதம் குறித்தாவது உதயநிதி இவ்வாறு பேச முடியுமா? அவ்வாறு பேசியிருந்தால்அவருக்கு என்ன கதி ஏற்பட்டிருக்கும்?

ஹிந்துக்கள் அமைதியை விரும்புவர். அதே நேரத்தில் அரக்கர்களை கொல்வோம். சனாதன தர்மம் குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்துள்ள உதயநிதி ஒரு அரக்கன். அவரது தலையை கொண்டு வருவோருக்கு, 10 கோடி ரூபாய் பரிசு அளிப்பேன்.யாரும் கொல்லாதபட்சத்தில் என்னுடைய கைகளாலேயே அவரைக் கொல்வேன். இதற்காக என்னுடைய கத்தியை தயார் செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அயோத்தி துறவி அறிவிப்பு ! வேறு எந்த மதம் குறித்தாவது உதயநிதி இவ்வாறு பேச முடியுமா?

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அயோத்தி துறவி அறிவிப்பு ! வேறு எந்த மதம் குறித்தாவது உதயநிதி இவ்வாறு பேச முடியுமா?

Exit mobile version