பாஸ்போர்ட் தில்லுமுல்லு அம்பலப்படுத்தப்படும்! வி.சி.க முக்கிய நிர்வாகியை சம்பவம் செய்தார்! பா.ஜ.கவின் தடா பெரியசாமி.

1.ஜெயராஜ் (எ) வன்னி அரசுவின் 30.9.2021 முகநூல் பதிவில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களுக்கு எச்சரிக்கை என்ற செய்தியை பார்த்தேன். – 23 ஆம் புலிகேசி இருக்கத்தானே செய்கிறார்கள். தனக்கு வன்னியரசு என்று பெயர் வைத்துக் கொண்டால் ஈழப்போராளி என்ற கற்பனை.

இவரின் பின்னணி தெரியாதவர்கள் வேண்டுமானால் ஆச்சரியப்படலாம். உண்மையைச் சொன்னால் ஏன் எறிகிறது. கண்ணகி முருகேசன் வழக்கில் தங்கவேல் (எ) கிட்டும், சிந்தனைச் செல்வனும் பஞ்சாயத்து செய்தது உண்மைதானே! திருமாவளவன் அவர்கள் கைபேசி வாயிலாக பேசியது உண்மைதானே!.

அதேபோன்று புலவர் கலியபெருமாள் அவர்களின் மூத்த மகன் வள்ளுவன் அவர்களும் (இறந்துவிட்டார்) பேசியது உண்மைதானே!. உண்மையைச் சொன்னால் ஆர்எஸ்எஸ் கைக்கூலி என முத்திரை குத்துவது வழக்கமாகிவிட்டது. கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட் தோழர்கள் மத்தியில் மாற்று கருத்து எழுந்தால் அவரை உடனே CIA என்பார்

ட்ராட்ஷ்கியவாதி என்பார்கள்.அதே போன்று தான் திராவிட மண்டைகள் மாற்றுக்கருத்து கேட்பவர்களை, உண்மையைச் சொல்பவர்களை ஆர்எஸ்எஸ் கைக்கூலி என்பார்கள். தஞ்சை மணியரசன் அவர்கள் தனது தமிழ் தேசிய தமிழர் கண்ணோட்டம் இதழில் (ஜனவரி 2012) புரட்சியாளர் அம்பேத்கரையே ஆர்எஸ்எஸ் வாதி போன்று எழுதிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளதுதானே!. ஆர்எஸ்எஸ் அமைப்பு பட்டியல் சமூக இயக்கங்களை உடைக்க திட்டமிட்டு உள்ளது என வன்னியரசு எங்கிருந்து மோப்பம் பிடித்தாரோ!.

இது ஒரு திராவிட புறட்டு. ஆர்எஸ்எஸ் நானறிந்த வகையில் பட்டியல் சமூகத்தின் மேம்பாட்டிற்கு பாடுபட்டு வருகின்றதே ஒழிய எதிரான செயல்பாட்டில் எங்கும் இருந்ததில்லை. ஆர்எஸ்எஸ் க்கும் சாதி பார்க்கின்ற சிந்தனையும் கிடையாது. எனவே வழக்கறிஞர் இரத்தினம் அவர்களை ஆர்எஸ்எஸ் கைக்கூலி என சித்தரித்து தனிமை படுத்தி விடலாம் என மனப்பால் குடிக்க வேண்டாம். வன்னியரசு கூறியதற்கு மண்ணிப்பு கேட்க வேண்டும்.

இல்லையேல் உங்களது பாஸ்போர்ட் தில்லுமுல்லு முதல் சொத்துகுவிப்பு வரை அத்தனை விஷயங்களையும் அம்பலப்படுத்த வேண்டியிருக்கும்.

என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version