நாடாளுமன்றத்தின் மீது கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் பிரதமர் மோடி.

நாடாளுமன்றத்தில் கடந்த 2001ம்  ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலில், உயிரிழந்த  தியாகிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

19 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட தற்கொலைத் தாக்குதல் படை இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கியது, அன்று மக்களவை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.  

நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கரவாதிகள் நுழைவதைத் தடுத்தபோது, மொத்தம் ஒன்பது பேர் பலியானார்கள். டெல்லி காவல்துறையின் ஐந்து பாதுகாப்புப் பணியாளர்கள், சிஆர்பிஎப்-இன் (CRPF) ஒரு பெண் கான்ஸ்டபிள் மற்றும் நாடாளுமன்ற கண்காணிப்பு மற்றும் வார்டு பிரிவின் இரண்டு பாதுகாப்பு உதவியாளர்கள் என பலர் இறந்தனர். தோட்டத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த தோட்டக்காரர் ஒருவரும்,  உயிரிழிந்தனர். நாடாளுமன்ற தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன? சில எம்.பி.க்களை பிணைக்கைதிகளாக வைப்பது அவர்களின் திட்டம். ஆனால், அவர்களின் திட்டத்தை பாதுகாப்புப் படையினர் முறியடித்தார்கள். துயரமும், துணிச்சலும், விவேகமும் நிறைந்த இந்த சம்பவத்தின் 19-ஆவது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
 
இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பயங்கரவாதிகளும் டிசம்பர் 13 ம் தேதி பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது கொல்லப்பட்டனர்.  நான்கு பேர் கைது செய்யப்பட்டு சில நாட்களிலேயே அவர்கள் இந்த தாக்குதலுக்கு திட்டமிட்ட சூத்திரதாரிகள் என குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.  முகமது அஃப்சல் குரு (Mohammed Afzal Guru), ஷெளகத் உசேன் (Shaukat Hussain), அஃப்சன் குரு (Afsan Guru), எஸ்.ஏ.ஆர். ஜீலானி (SAR Geelani ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கு சுமார் ஒரு தசாப்த காலம் நடைபெற்றது. டெல்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் இறுதியில் இருவரை விடுவித்தது. மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு, ஷெளகத் ஹுசேன் குருவுக்கு தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. கிலானி, அஃப்சன் குரு ஆகியோர், வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இது குறித்து டிவிட்டரில் அவர் விடுத்துள்ள தகவலில், ‘‘கடந்த 2001ம் ஆண்டு இதே தினத்தில் நமது நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட  கோழைத்தனமான தாக்குதலை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம்.  நாடாளுமன்றத்தை காக்க, உயிரிழந்தவர்களின்  வீரத்தையும், தியாகத்தையும் நாம் நினைவு கூறுகிறோம். அவர்களுக்கு இந்தியா என்றும் நன்றியுடன் இருக்கும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version