Sunday, March 22, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்தியாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய உலக தலைகள்! பாகிஸ்தானில் புல், பூண்டு கூட முளைக்காது! கதறும் பாக்..

Oredesam by Oredesam
May 6, 2025
in இந்தியா, செய்திகள்
0
World power

World power

FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் சில ஆண்டுகளாக இருந்த இடம் தெரியாமல் இருந்தது. கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் மிக அமைதியாக சென்று கொண்டிருந்தது காஷ்மீர். தீவிரவாத சம்பவங்கள் எதுவும் இல்லாததால் நம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்தியா மட்டும் அல்லாது, உலகம் முழுவதிலும் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு மக்கள் படையெடுக்க தொடங்கினர்.

குறிப்பாக தற்போது கோடை காலத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத்தலங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் தான் கடந்த மாதம் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குழுமியிருந்தனர். அப்போது அங்கு வந்த ராணுவ உடை அணிந்த தீவிரவாதிகள் பயணிகள் மீது திடீர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

தாக்குதல் சம்பவத்தை நடத்தி விட்டு தீவிரவாதிகள் மறைந்த நிலையில் இந்த சம்பவம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் முப்படைகளும் தயார் நிலையில் இருக்கிறது. போர் போன்ற அவசர காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான அவசரகால ஒத்திகையும் நடைபெற இருக்கிறது.

இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் உள்ளூர் நபர்களின் உதவியோடு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அனந்தநாக், குப்வாரா, பெகல்காம் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு அருகே நீலம் பள்ளத்தாக்கு வழியாக தீவிரவாதிகள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. காடுகளில் மறைந்து வாழ்வது எப்படி என அவர்கள் பயிற்சி அளித்ததாகவும், தீவிரவாதிகளில் ஒருவரான ஹாஷிம் மூசா பாகிஸ்தானில் சிறப்பு பாதுகாப்பு படையில் பாரா கமாண்டமாக வேலை பார்த்தவர் என்ற தகவல் பாகிஸ்தானுக்கு இந்த தாக்குதலில் தொடர்பு இருப்பதை உறுதி செய்தது.

இதனால் கோபமடைந்த இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானப்படை, கப்பற்படை தளபதிகள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தாக்குதலுக்கு நாங்கள் தயார் என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. முக்கிய நாடுகள் இந்தியா பக்கம் நிற்கின்றன. ஏற்கனவே இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் நான் போரை விரும்பவில்லை. அமைதியை தான் விரும்புகிறேன். இருந்தாலும் ஒருவேளை பாகிஸ்தான் இந்தியாவை தாக்கினால் நான் இந்தியா பக்கம் நிற்பதுடன் பாகிஸ்தானை அழிக்கவும் செய்வேன். ஏனெனில் எனக்கு இந்திய மக்களை மிகவும் பிடிக்கும். அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

அமெரிக்க டிரம்ப்பின் இந்த எச்சரிக்கை வெறும் வார்த்தைகளில் மட்டும் அல்ல . அது பல செயல்பாடுகளில் தீர்க்கமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கு வழங்கிய அதி நவீன தளவாடங்களை பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என்று கடுமை காட்டும் அளவிற்கு பாகிஸ்தான் மீது வெறுப்பும் பாரதத்தின் மீது இணக்கமும் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது தீவிரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது, இந்தியாவுடன் ரஷ்யா நிற்கும் என உறுதி அளித்தார். இதேபோல இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். அவர் இந்த விவகாரத்தில் தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா பக்கம் ஜப்பான் இருக்கும் என உறுதி அளித்துள்ளார்.

இது மட்டுமின்றி ஏற்கனவே இந்தியாவுக்கு அரசியல் விமானங்களை வழங்கி வரும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவின் பக்கமே நிற்கின்றன. சீனா பாகிஸ்தானுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவி செய்ய வாய்ப்பு இருந்தாலும் இந்தியா சீனாவின் மிகப்பெரிய பொருளாதாரக் கூட்டாளியாக இருக்கிறது. இதனால் சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவ தயங்குகிறது. துருக்கி உள்ளிட்ட சில நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்தாலும், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தால் அந்த நாடுகளால் தாங்கிக் கொள்ள முடியாது.

தற்போதைய சூழலில் போர் நடந்தாலும் இந்தியாவின் கையே ஓங்கி நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இஸ்ரேல் ஆகியவை கூட்டு சேர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கலாம் என்கின்றனர் உலக பாதுகாப்பு நிபுணர்கள்.

அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவின் போர் விமானங்கள் அதிநவீன தொழில்நுட்பங்கள் எதையும் வர இருக்கும் யுத்தத்தில் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்த முடியாது. இரண்டாவது விஷயம் சீனாவின் ஜே 17 – ஜே 10 ரக விமானங்களையும் பாகிஸ்தான் கைவசம் இருக்கும் ஷாஹீன் – அஃப்ரிதி – கோரி – கஜினி என்னும் சீனா – பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பு ஏவுகணைகளையும் மட்டுமே நம்பி பாகிஸ்தான் இந்தியாவை எதிர்கொள்ள தயாராகிறது .

காரணம் சீனாவின் விமானங்கள் அதன் தளவாடங்கள் எதுவும் இதுவரை எந்த ஒரு யுத்தத்திலும் பயன்படுத்தப்பட்டது இல்லை. முதல் முறையாக சீனாவில் விமானங்கள் பாகிஸ்தான் மண்ணிலிருந்து ஒரு நேரடி யுத்தத்தில் ஈடுபட இருக்கிறது. அதுவும் உலகின் மூன்றாவது சக்தி வாய்ந்த விமானப்படையை வைத்திருக்கும் பாரத விமானப்படையோடு மோத இருக்கிறது என்பதுதான் சீனாவின் பதட்டத்திற்கு காரணம்.

பாகிஸ்தானை பாதுகாத்தால் மட்டுமே அங்கிருக்கும் தன் முதலீடுகளை பாதுகாக்க முடியும். அதே நேரத்தில் பாகிஸ்தான் ஆதரவாக களம் இறங்கினால் பாகிஸ்தான் உடன் சேர்ந்து தானும் பாரதத்திடம் மிதிபட வேண்டி வரும் என்ற இக்கட்டான நிலையில் சீனா சிக்கி தவிக்கிறது. பாவம் கல்வானில் வாங்கியது சீனா இன்னும் மறக்கவில்லை போல.

அதே நேரத்தில் அமெரிக்காவின் நவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தும் அளவிற்கு இந்தியாவின் ஏவுகணைகள் தரம் வாய்ந்தது. சீனாவின் தயாரிப்புகள் எல்லாம் ஒரு விஷயமே இல்லை. சமீபத்தில் ரஷ்ய – உக்ரைன் யுத்தத்தில் ரஷ்யா பயன்படுத்திய ஏவுகணைகளில் பாரதத்தின் அக்னி உள்ளிட்ட பல தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டதும் உலகறியும். அப்படி இருக்க பாரதத்தின் விமானப்படை சீனாவின் போர் விமானங்களை நடுவானில் பந்தாடினால் அதில் முதல் அடி பாகிஸ்தானுக்கு எனில் உச்சகட்ட கேவலம் சீனாவிற்கும் தான் என்பது சீனாவின் கவலை.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு மைய புள்ளி டில்லி நிஜாமுதீன் மசூதியில் என்ன நடந்தது !

இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு மைய புள்ளி டில்லி நிஜாமுதீன் மசூதியில் என்ன நடந்தது !

March 31, 2020

தமிழகத்தில் அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்ற தனியார் நீட் தேர்வு மையம்.

November 19, 2020
கொரோனாவால்  பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வளர்ப்பு தந்தையாக மாறினார், பிரதமர் மோடி

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வளர்ப்பு தந்தையாக மாறினார், பிரதமர் மோடி

May 30, 2021
இதுவரை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு 3972 மெட்ரிக் டன் விநியோகம் .

தமிழகத்திற்கு 5674 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கியுள்ளது மத்திய அரசு! ஆக்ஸிஜன் அதிகமாக பெற்றதில் இரண்டாமிடம் தமிழகம்!

June 17, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x