குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் விடுதலை இல்லை! தி.மு.கவிற்கு எதிராக திரும்பும் இஸ்லாமியர்கள்!

சிறையிலிருந்து தண்டனைக்காலம் முடியும் முன் யார் யாரை விடுதலைச் செய்யலாம், யார் யாருக்கு தகுதி, யார் யாருக்கு தகுதி இல்லை என்கிற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் பெண்களுக்கு எதிரான குற்றம், ஊழல் வழக்குகளில் சிக்குபவர்கள், தீவிரவாத நடவடிக்கையால் கைதானவர்கள், குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் கட்டாயம் விடுதலை இல்லை என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுவர் விடுதலை கோரும் வழக்கில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதே குண்டுவெடிப்பில் ராஜீவ் கொல்லப்பட்ட வழக்கில் தான். அதேபோல் கோவை குண்டு வெடிப்பில் கைதாகி பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்கள் விடுதலை செய்ய கோரிக்கை வைக்கின்றனர். புதிய அரசாணையின்படி இவர் விடுதலையாகவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது திமுகவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்கள் முதல்வர் மு.கஸ்டாலினை நேரில் சென்று கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி அதிக நாள் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க கோரிக்கை வைத்தார்கள். ஆனால் தற்போது அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுளது. இதில் அரசியல் செய்வதற்கு தினகரன் இறங்கிவிட்டார். மேலும் நகராட்சி மாநகராட்சி தேர்தல் வர உள்ள நிலையில் இது இஸ்லாமியர்களின் காவலராக காட்டி கொள்ளும் திமுகவிற்கு இது பெரும் இடியாக அமைந்துள்ளது.

திமுக அரசு பாஜக அரசின் வழிகாட்டியாகவே செய்ல்படுகிறது என்பதை இந்த சம்பவம் நன்றாக உணர்த்துகிறது என பல ஜாமத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். பாஜக தான் நினைத்தை திமுகவை வைத்து நிறைவேற்றிவிட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள ஜாமத் நிர்வாகிகள் இந்த அரசாணை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்கள். திமுக அதரவு நிலைப்பாட்டில் உள்ள இஸ்லாமிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் இது குறித்து வாய்திறக்கவில்லை. இது வரும் தேர்தல்களில் எதிரொலிக்கும் என ஜமாத் நிர்வாகிகள் கூறினார்கள்.

அரசாணை வெளியீடு:

இறுதியாக, டி.ஜி.பி., அல்லது சிறைத்துறை டி.ஜி.பி., உரிய விதிகளின்படி, ஒவ்வொரு வழக்கிலும் விதிமுறைகளின்படி முடிவெடுத்து, அரசின் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version