பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல்.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி.
9 இடங்களில் இலக்குகள் துல்லியமாக தாக்கி அழிப்பு – ராணுவ அதிகாரிகள்.
துல்லியமாக தாக்கும் அதிநவீன குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் – பாதுகாப்புப் படை அதிகாரிகள்.
தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு – 60க்கும் மேற்பட்டோர் காயம்.
தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள் எவை?
எந்தெந்த இடங்கள், எந்த அமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது என்ற விவரங்கள்:
- மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் – ஜெய்ஸ் இ முகமது அமைப்பு
- மார்கஸ் தைபா, முரிட்கே -லஷ்கர் இ தொய்பா அமைப்பு
- சர்ஜால், தெஹ்ரா கலான் – ஜெய்ஸ் இ முகமது அமைப்பு
- மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் – ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு
- மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா – லஷ்கர் இ தொய்பா அமைப்பு
- மர்கஸ் அப்பாஸ், கோட்லி – ஜெய்ஸ் இ முகமது அமைப்பு
- மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி – ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு
- ஷவாய் நல்லா கேம்ப், முசாபராபாத் – லஷ்கர் இ தொய்பா அமைப்பு
- சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் – ஜெய்ஸ் இ முகமது அமைப்பு