Saturday, August 13, 2022
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

டிஜிட்டல் இணையதள தொழில்நுட்பத்தில், உலகின் மிகப்பெரிய சந்தை இந்தியா தான்.

Oredesam by Oredesam
July 11, 2020
in உலகம்
0
FacebookTwitterWhatsappTelegram

டிஜிட்டல் இணையதள தொழில்நுட்பத்தில், உலகின் மிகப்பெரிய சந்தையாகவும், உலகில் மிக அதிக அளவில் மென்பொருள்கள் மற்றும் இணையதளப் பயன்பாட்டு நிறுவனங்கள் செயல்படும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள், உள்நாட்டில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறையால் பிறப்பிக்கப்படும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, புள்ளி விவரப்பாதுகாப்பு மற்றும் தனி நபர் ரகசியங்களை மீறுவதாக அமையக்கூடாது.

எனினும், சில நிறுவனங்கள், நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன.இத்தகைய நிறுவனங்கள் சில செல்போன் செயலிகள் வாயிலாக, அவற்றை பயன்படுத்துவோரின் விவரங்களை சட்ட விரோதமாக திருடுவதுடன், அவற்றை வேறு சிலருக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

READ ALSO

பொருளாதாரத்தில் பின்னி பெடலெடுக்கும் இந்தியா ! ‘3 டிரில்லியன்’ டாலரை தொட்ட இந்தியா !

ஜெர்மனியில் ஒலித்த ‘வந்தே மாதரம்’ ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு !

இதுபோன்ற புள்ளிவிவரத் தொகுப்பு, நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கக்கூடும்.

கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் எல்லையில் சீன அத்துமீறல்கள் நடந்து வரும் வேளையில், இந்தியாவில் சீனச் செயலிகளுக்குத் தடை விதித்து மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அண்மைக்காலத்தில் மளிகைப்பொருள்கள் கொள்முதல் (பிக் பேஸ்கட்), உணவு விநியோகம் (சொமாட்டோ மற்றும் ஸ்விகி), பயண டிக்கெட் முன்பதிவு ( மேக் மை ட்ரிப்) போன்ற சீனச் செயலிகள் இந்தியாவில் மிக ஆழமாகக் காலூன்றி உள்ளன.

மின்னணு வர்த்தகம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை போன்றவற்றிலும் சீனச் செயலிகளின் ஆதிக்கம் தலை தூக்கியுள்ளது.சீனாவால் அல்லது அந்நாட்டில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் இத்தகைய செயலிகளை உருவாக்கி நிர்வகித்து வருகின்றன.

சீனாவின் இந்தச் செயலிகளை இந்திய மக்கள் பெருமளவுக்கு சார்ந்துள்ளது கண்கூடாக தெரிகிறது.

இந்நிலையில், நாட்டின் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர்கள் பலர் உயிரிந்ததையடுத்து, சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்த அழைப்பு சர்வதேச அளவிற்குச் சென்றிருப்பதுடன், பிற நாடுகளிலும் டிக் டாக் போன்ற சீனச் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுபோன்ற செயலிகள் மூலம் சீன அரசு, அந்தச் செயலிகளைப் பயன்படுத்தும் பல லட்சக்கணக்கானோரை உளவு பார்த்து வருகிறது. பிறரைத் தொடர்பு கொள்வதற்கு வாட்ஸ் அப் எனப்படும் அமெரிக்க செயலியையும், வீடியோகால் மூலம் பேசுவதற்கு, அமெரிக்காவில் வசிக்கும் சீன நாட்டவரால் நடத்தப்படும் ஜும் செயலியையும் பயன்படுத்தி வருகிறது. சீனாவின் 59 செயலிகளைத் தடை செய்வதற்குக் கூட இந்திய அரசு கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற வெளிநாட்டுச் அமைப்புகளைத் தான் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. எனவே, இவற்றுக்கு மாற்றாக மிகவும் பயனுள்ள வெளிப்படையான, செயல்பாடு மிகுந்த மற்றும் பாதுகாப்பாக செயலிகளை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டயமாகியுள்ளது.

இதுபோன்ற இந்தியச் செயலிகளைப் பயன்படுத்துவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதால், இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து மக்களிடையே வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக, டிக் டாக், இன்ஸ்ட்ராகிராம், யூ டியூப் செயலிகளுக்கு பதிலாக இந்தியாவின் மித்ரன் (Mitron) மற்றும் சிங்காரி (Chingari) செயலிகளையும், ஷேரிட்டுக்கு பதிலாக ஜியோ ஸ்விச், Baidu Map மற்றும் கூகுள் மேப்பிற்கு பதிலாக மை மேப் இந்தியா மூவ், விளையாட்டுக்கான பப்ஜி, கிளாஸ் ஆப் கிங்ஸ் போன்றவற்றுக்கு பதிலாக லூடோ கிங், சுடோகு கிங் போன்ற செயலிகளும், வர்த்தகத்திற்கான பிளிப் கார்ட், ஸ்னாப் டீல், அமேசான் போன்றவற்றுக்கு பதிலாக Tata Cliq, Reliance Digital / Jio Mart போன்ற இந்தியச் செயலிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இதே போன்று, தடை செய்யப்பட்ட 59 சீனச் செயலிகளில் 54 செயலிகளுக்கு மாற்றாக இந்தியச் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், மத்திய அரசு உள்நாட்டு உற்பத்திக்கு புத்துயிர் ஊட்டவும், தற்சார்பு நிலையை எட்டவும் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இது போன்ற முயற்சிகள், நாட்டின் வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அர்த்தமுள்ள வாழ்க்கை மற்றும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

ShareTweetSendShare

Related Posts

பொருளாதாரத்தில் பின்னி பெடலெடுக்கும் இந்தியா ! ‘3 டிரில்லியன்’ டாலரை தொட்ட இந்தியா !
இந்தியா

பொருளாதாரத்தில் பின்னி பெடலெடுக்கும் இந்தியா ! ‘3 டிரில்லியன்’ டாலரை தொட்ட இந்தியா !

June 28, 2022
ஜெர்மனியில் ஒலித்த ‘வந்தே மாதரம்’  ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு !
உலகம்

ஜெர்மனியில் ஒலித்த ‘வந்தே மாதரம்’ ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு !

June 26, 2022
மோடி அரசின் மற்றொரு சாதனை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஆதரிக்கும்  பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்.
இந்தியா

மோடி அரசின் மற்றொரு சாதனை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஆதரிக்கும் பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்.

May 10, 2022
“30 ஆண்டுகால அரசியல் குழப்பத்திற்கு ஒரு விரல் புரட்சி மூலம் முற்றுப்புள்ளி” – ஜெர்மனில் பிரதமர் மோடி பேச்சு.
உலகம்

“30 ஆண்டுகால அரசியல் குழப்பத்திற்கு ஒரு விரல் புரட்சி மூலம் முற்றுப்புள்ளி” – ஜெர்மனில் பிரதமர் மோடி பேச்சு.

May 3, 2022
சத்தம் இல்லாமல் சாதிக்கும் மோடி அரசு இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையான தடையற்ற வணிக உடன்பாடு …
உலகம்

சத்தம் இல்லாமல் சாதிக்கும் மோடி அரசு இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையான தடையற்ற வணிக உடன்பாடு …

May 3, 2022
தமிழகத்தில் ஆறு மாதத்தில் அசுர வளர்ச்சி! அடுத்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவின் ஆட்சி!-அண்ணாமலை!
உலகம்

“தமிழக மீனவர் தவறுதலாக எல்லை தாண்டி பிடிபடுவோரை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்” – அண்ணாமலை

May 3, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

துணை முதல்வராகும் வாரிசு! முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன் வெளியாகும் அறிவிப்பு!

துணை முதல்வராகும் வாரிசு! முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன் வெளியாகும் அறிவிப்பு!

December 11, 2021
அண்ணாமலைக்கு வரவேற்பு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அதிர்ச்சி அடைந்த ஆளும் கட்சி!

அண்ணாமலைக்கு வரவேற்பு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அதிர்ச்சி அடைந்த ஆளும் கட்சி!

July 18, 2021
பாதுகாப்பு துறையின் முக்கிய அறிவிப்புகள்

பாதுகாப்பு துறையின் முக்கிய அறிவிப்புகள்

February 4, 2021

சித்ரா பவுணர்மி என்ன சிறப்பு

April 26, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • ‘இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட,திமுக அரசு திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு.
  • கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை..
  • பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !
  • தேசநலனுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த-பாஜக தலைவர் அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x