மாஸ் காட்டும் மோடி பெட்ரோல்,டீசல் விலை குறைப்பை தொடர்ந்து இந்தியர்களுக்கு மேலும் இரண்டு தீபாவளி பரிசு…

oredesam

oredesam news

ஆச்சரியங்களை கொடுக்கும் மோடி அரசு, இந்திய வரலாற்றிலே மிக பெரிய ஆச்சரியத்தை தீபாவளி பரிசாக கொடுத்திருக்கின்றது ஆம் இரு பெரும் பரிசுகளை கொடுத்திருக்கின்றது இந்தியாவின் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு `10 ரூபாயும் தடாலடியாக குறைக்கபட்டிருப்பது.இதுவே இந்திய வரலாற்றில் முதல்முறைஏறிய விலைவாசி இறங்கும் அதிசயத்தை மோடி அரசுதான் முதலில் செய்திருக்கின்றதுஇந்திய பெட்ரோல் விலை முதன் முதலில் விண்ணில் பறக்க ஆரம்பித்தது இந்திரா காலங்களில், அப்பொழுது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை அவர் சடுதியாக குறைக்க அதில்தான் பெட்ரோல் விலை எகிறி அது மன்மோகன் காலம் வரை நீடித்தது.

இப்பொழுது முதன் முறையாக அது மோடி ஆட்சியில் குறைந்திருக்கின்றது இதற்கு 3 விஷயங்கள் காரணம் முதலில் இந்திய அரசின் சரியான வரிகொள்கை, முறையான வரிவசூலிலும் இறுக்கமான நடவடிக்கைகளினாலும் தேசவருமானம் அதிகரித்திருக்கின்றது, முறைகேடுகள் முழுக்க தடுக்கபட்டிருக்கின்றன‌ இரண்டாவது இந்திய பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருப்பது, கொரோனா காலத்திலும் இந்த அதிசயத்தை இந்தியா செய்திருக்கின்றது.

மூன்றாவது அரபு எண்ணெயுடன் ரஷ்ய எண்ணெயும் இந்தியாவால் வாங்கபடும் எனும் வகையில் சர்வதேச எண்ணெய் ஏற்றுமதிநாடுகளும் வியாபார தந்திரம் செய்கின்றன‌இதில்தான் மத்திய அரசு விலையினை குறைத்திருக்கின்றது, அதனை தொடர்ந்து பாஜக மாநில அரசுகளும் வரியினை குறைக்க அசாம் போன்ற மாநிலங்களில் பெட்ரோல் விலை 79 ரூபாய்க்கு வர ஆரம்பித்தாயிற்று உபி அரசும் இந்த நடவடிக்கையில் இறங்கி எண்ணெய் விலையினை குறைக்க ஆலோசிக்கின்றது.

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததையடுத்து. பாஜக ஆளும் மாநில அரசுகள் அவற்றின் மீதான வாட் வரியை குறைத்துள்ளன.

புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 7 ரூபாய் குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.இதன்மூலம் புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.12.85, டீசல் விலை 19 ரூபாயும் குறைந்தது.புதுவையில் பெட்ரோல் 94.94 ரூபாய்க்கும், டீசல் 83.58 ரூபாய்க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக அரசின் நிலைப்பாடு தெரியவில்லை தமிழர் அபிமான அரசு என்றால் இன்னும் குறைக்கலாம்.பெட்ரோல் விலையினை தொடர்ந்து இந்தியருக்கு கிடைத்த இன்னொரு செய்தி கோவாக்சின் நிறுவண கொரோனா மருந்தை உலக சுகாதார நிறுவணம் அங்கீகரித்திருப்பது.

இதனால் இனி இந்தியர்கள் உலக பயணங்கள் மேற்கொள்ள தடையிராது அதே நேரம் கோவாக்சின் ஏற்றுமதியும் அதிகரிக்கும்இந்த இரு மகிழ்ச்சியான செய்தியினைடையே மூன்றாவது ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்தியாவினை எட்டியிருக்கின்றது, அந்த சுவிஷேஷ நற்செய்தியினை கொடுத்திருக்கும் நாடு ரஷ்யாஅந்த தேசம் தன் 6ம் தலைமுறை வான்பாதுகாப்பு சாதனமான “எஸ் 500” சிஸ்டத்தை இந்தியாவுக்கு வழங்க தயார் என தீபாவளி நாளில் அறிவித்திருக்கின்றதுமோடியின் ஆட்சியில் நிதி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளியுறவுதுறை அமைச்சு இன்னும் சுகாதாரதுறை அமைச்சுகள் மிகபெரிய வரலாற்று சாதனைகளை செய்கின்றதுஇந்தியா இன்னும் பலமாக மோடி அரசு இன்னும் 15 ஆண்டுகளாவது ஆட்சியில் தொடரவேண்டும், அது நடக்க வேண்டும் என தீபாவளி நாளில் தேசம் பிரார்த்தித்து கொண்டிருக்கின்றது.

கட்டுரை:- எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.

Exit mobile version