தி.மு.க போஸ்டருக்கு காவல்நின்ற போலீசார்!பா.ஜ.க விளம்பரத்தின் மீது தி.மு.கவினர் போஸ்டர் ஒட்டி அராஜகம்! பாஜக இளைஞரணியின் மீது கொலைவெறி தாக்குதல்

பிரதமர் திரு.நரேந்திர மோடியின்பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநிலம் முழுவதும் ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன.சுவர் விளம்பரங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் என பல நிகழ்ச்சிகள் இந்த வாரம் தோறும் கொண்டாடப்பட்டுவருகிறது.

பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா இந்தமுறை தமிழக முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாட்டப்பட்டதை தி.மு.கவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லைபிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா தொடர்ந்து சிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் சுவர் பகுதிகளில் பாஜக சின்னங்கள் வரையப்பட்டன.

இந்த நிலையில் பாஜக வரைந்திருந்த சுவரில் திமுகவினர் போஸ்டர் ஓட்டினார்கள் இதை கண்டித்து பாஜக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் ஆனால் அங்கு வந்த காவல்துறையினரோ திமுகவின் போஸ்டருக்கு காவல் காத்து நின்றது. இதுதான் மிகப்பெரிய கொடுமை. பாஜக இளைஞரணியின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.

Exit mobile version