காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் 17 பொதுத்துறை வங்கிகளிடத்தில் ரூ. 9,000 கோடி கடன் வாங்கியவர் கிங்பிஷர் நிறுவுனர் விஜய் மல்லையா. விஜய் மல்லையா கடனை திருப்பி செலுத்தாமல்...
மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் 11 பெண் அமைச்சர்களுக்கு தேசிய மகளிர் அணி தலைவர் திருமதி வானதி சீனிவாசன் தலைமையில் பாராட்டு விழா பாஜக டெல்லி தலைமையகத்தில்...
குஜராத்திற்கு செல்கிறோம் என்றதும் ஒரு இனம் புரியாத உணர்வு என்னை சூழ்ந்து கொண்டது. இந்திய வரலாற்றில் குஜராத்திற்கென்று ஓர் தனித்த இடம் இருப்ப தை யாரும் மறுக்க...
முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.அடுத்த வருடம் நடைபெற இருக்கும் குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பாக குடியரசு தலைவர் வேட்பாளராக போட்டியிட எடியூரப்பாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்...
கர்நாடகாவில் 4 முறை முதல்வராக இருந்த எடியூரப்பா இன்று முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி...
பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும் கோவை சட்டமன்ற உறுப்பினருமான திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் குஜராத் மகளிரணி செயற்குழு கூட்டத்திற்கு கலந்து கொண்டு குஜராத் மொழியில் பேசி...
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரியின் ஆட்டோ அவசர கால ஊர்தி சேவையின் முன்முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று குறிப்பிட்டு அவருக்கு பாராட்டு தெரிவித்தார். “மலைப் பிரதேசங்களில் வசிக்கும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக அவர்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். ராதிகா, குன்னூரில் ஓர் உணவகத்தை நடத்தி வருகிறார். ஆம்புரெக்ஸ் என்ற இந்த சேவையைத் தொடங்குவதற்காக உணவகத்தைச் சேர்ந்த தமது நண்பர்களிடம் அவர் நிதி உதவியைப் பெற்றார். இன்று, நீலகிரி மலைப்பிரதேசத்தில் 6 அவசர சிகிச்சை ஊர்திகள் இயங்குவதுடன், அவசர நிலையின்போது தொலைதூரத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு இவை மிகவும் உதவிகரமாக உள்ளன. தூக்குப் படுக்கை, பிராணவாயு சிலிண்டர், முதலுதவிப் பெட்டி மற்றும் இதர பொருட்கள் ஆம்புரெக்ஸில் இடம்பெற்றுள்ளன”, என்று பிரதமர் கூறினார். பிரதமரின் இந்தப் பாராட்டுதலை அடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் திரு எல் முருகன், திருமதி ராதிகா சாஸ்திரியை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். பிறகு அவர் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில் இந்தத் தன்னலமற்ற சேவை நீலகிரியில் வசிக்கும் மக்களை ஊக்குவிப்பதுடன் அந்தப் பகுதியில் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனதருமை நாட்டுமக்களே, இரண்டு நாட்கள் முன்பாக, சில அற்புதமான காட்சிகள், நினைவினை விட்டு நீங்கா சில நினைவுகள்….. இவை இப்பொழுதும் என் கண்களின் முன்பாக நிழலாடுகின்றன. ...
தி இந்து குழுமத்தின் Chairperson மாலினி பார்த்தசாரதி பிரதமர் நரேந்திர மோதியை கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்தித்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு...
நேற்று இரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 43 கோடிக்கும் அதிகமானோருக்கு (43,26,05,567) கொவிட்-19 தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி முக்கிய...